Monday, October 18, 2010

விரலிடையே இடம் பிடித்தாய்

இதழ் தடவி உடல் எரித்தாய்

தனிமைகளை நீ நிறைத்தாய்

தவணைகளில் உயிர் பிரித்தாய்

மறந்திடவோ மனமுமில்லை

துறந்திடவோ துணிவுமில்லை

இருந்தும் உதறிடவே முடிவெடுத்தேன்

நம் உறவு ரத்தை பதிவு செய்தேன்

நுனி சிவக்கும் உன் அழகு கோபம்

இனி ரசிக்க ஆசை இல்லை

சுருட்டுகளின் தங்க ராஜா

இனி உனக்கு இங்கு வேலை இல்லை

No comments:

Post a Comment